sillapathigaram
அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால். பதிகம், தாவிய சேவடிசேப்பத் தம்பியடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே. திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்தலான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல் ஈரேழ் தொடுத்த செம்முறைக்கேள்வியின் ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி வன்மையிற் கிடந்த தார பாகமும் மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை யழிந்த பாகமும் பொற்புடைத் தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப்பட்டன ள...